கால் புண் என்பது காலில் காயம் காரணமாக புண் ஏற்பட்டு அது சரியாகாமல், அதனுள் காற்று புகுந்து பாக்டீரியாகளை உருவாக்குகிறது. இவ்வகை புண்கள் பொதுவாக காலின் நரம்பு வழியாகவும் அல்லது ஏதேனும் காயம் ஏற்படும் போதும் ஏற்படுகிறது.
தோலில் ஏற்பட்ட புண் பொதுவாக ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் ஆறி விடுகிறது. இல்லையெனில் அது கால் புண்ணாக ( லெக் அல்சர் ) மாறுகிறது.
கால் புண் நோயின் அறிகுறிகள் :
- வீங்கிய கணுக்கால்
- கால் வீக்கம் அல்லது நரம்புகள் தடித்து காணப்படும்
- காலில் ஒரு கனரக உணர்வு
- நீண்ட நேரம் நிற்கும் போது கால்களில் வலி
- தோலில் நிறமாற்றம்
கால் புண் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் :
- சிரை நோய் : சிரை நோய் என்பது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் ஏற்படுவது. பெரும்பாலான கால் புண் சிரை நோய் மூலமாகவே ஏற்படுகிறது. பொதுவாக காலின் வால்வுகளில் இருந்தே இதயத்தில் இருந்து ரத்தம் சுழண்று கால்களுக்கு வருகிறது. காலின் நரம்புகள் வலு இழக்கும் போது ரத்தம் சீராக காலுக்கு செல்வது குறைந்து ரத்தம் கட்டி விடுகிறது. இதன் மூலம் தோல் பாதித்து கால் புண் (லெக் அல்சர்) ஏற்படுகிறது.
- கால் புண் பொதுவாக கீழ் வாதம் மற்றும் நீரிழிவு நோய் காரணமாகவும் ஏற்படுகிறது.
- தமனி நோய் : காலின் தமனிகளில் ஏற்படும் அடைப்புகள் மூலமாகவும் ரத்த ஓட்டம் குறைந்து கால் புண் ஏற்படுகிறது.
கால் புண் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகள் :
- உடல் எடை குறைக்க வேண்டும்
- நேரம் கிடைக்கும் போது எல்லாம் கால்களை உயரத்தில் வைக்க வேண்டும்.
- அழுத்தம் தரும் காலுறைகள் அணிய வேண்டும்.
எங்களின் மருத்துவமனையில் இறந்த திசு, பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தப்படுத்துதல், பாதிக்கப்பட்ட காயத்திற்கு டிரஸ்ஸிங் செய்தல், போன்ற அனைத்து சிகிக்சைகளும் மிக சிறந்த முறையில் செய்யபடுகிறது.
எங்களை பார்க்க @ : www.vikramsclinic.com
தொடர்பு கொள்ள @ : vikramsclinicchennai@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக